கள்ளச்சாரயத்தை முற்றிலும் தடுக்க கோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்புக்கு காரணமான காவல்துறை வருவாய்த்துறை அதிகாரிகளை கைது செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சி சார்பில் பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஒன்றியசெயலாளர் என்.கந்தசாமி தலைமை வகித்தார்.
மாவட்ட செயலாளர் ஏ.குமார் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து மாவட்டக்குழு உறுப்பினர்கள் கே.பூபதி,எம்.அருன்குமார்,ஒன்றி யகுழு உறுப்பினர்கள் பி.ரவி,கே.கோவிந்தசாமி,தீ.மாரி யப்பன்,எஎம்.மீனாட்சி எஸ்.தமிழ்மணி எம்.பழனி ஆகியோர் பேசினர்.
கள்ளச்சாராய விற்பனை செய்யும் சமூக விரோதிகளை கைது செய்ய வேண்டும். கள்ளச்சாராயம் மற்றும் போதைப்பொருள் பழக்கத்தை முற்றிலுமாக ஒழிக்க தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும்.போதைப் பொருளை தடுப்பதற்கு தனி சிறப்பு சட்டத்தை தமிழக அரசு இயற்ற வேண்டும். படிப்படியாக டாஸ்மாக் கடைகளை குறைத்து பூரண மதுவிலக்கு அமுல்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

