உண்ணாவிரதப்போராட்டத்தை ஆதரித்து வாழ்த்து தெரிவித்த தலைவர்களுக்கு நன்றி தெரிவித்த இபிஎஸ்
ஜனநாயகத்தைக் காக்கவும், கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு நீதிவேண்டியும் அஇஅதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்திய உண்ணாவிரத அறப்போராட்டத்திற்கு நேரில் வருகைபுரிந்தும், தொலைபேசி வாயிலாகவும் ஆதரவு தெரிவித்த
புரட்சி பாரதம் கட்சியின் தலைவரும் சட்டமன்ற உறுப்பினருமான
பூவை ஜெகன்மூர்த்தி அவர்களுக்கும், SDPI கட்சியின் மாநிலச் செயலாளர் கரீம் அவர்களுக்கும், SDPI கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் அவர்களுக்கும், இந்திய கம்யூனிஸ்ட் தொழிலாளிகள் கட்சியின் மாநில அமைப்புச் செயலாளர் R ராஜேந்திரன் அவர்களுக்கும், இந்திய குடியரசுக் கட்சியின் தலைவர் செ.கு. தமிழரசன் அவர்களுக்கும், பெருந்தலைவர் மக்கள் கட்சியின் தலைவர் என்.ஆர். தனபாலன் அவர்களுக்கும், ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநிலத் தலைவர் ஹைதர் அலி அவர்களுக்கும், நன்றி!

மக்களாட்சி விழுமியங்களைக் காக்க, மக்களுக்காக உரத்த குரல் கொடுக்கும் எதிர்க்கட்சியினை முடக்க நினைக்கும் ஆளும் விடியா திமுக அரசின் எண்ணத்தை தோழமைக் கட்சிகள் மற்றும் தமிழ்நாட்டு மக்களின் ஒருமித்த ஆதரவோடு முறியடித்து, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய மரணங்களுக்கு உரிய நீதியைப் பெற்றே தீருவோம். என தனது எக்ஸ் பக்கத்தில் அஇஅதிமுக பொதுச்செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

