தருமபுரி காவல்துறை குறைதீர்க்கும் கூட்டத்தில் 87 மனுக்களுக்கு தீர்வு
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் நடைபெற்றது.

இதில் மொத்தம் 87 மனுக்கள் பெறப்பட்டது அதில் 87 மனுக்கள் மீது தீர்வு காணப்பட்டது மேலும் புதிதாக 36 மனுக்கள் பெறப்பட்டது இந்த பொதுமக்கள் மனு மீது குறைதீர்க்கும் முகாமில் தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம் அவர்கள் தலைமையில் நடைபெற்றது இந்த முகாமில் காவல் கூடுதல் கண்காணிப்பாளர் பாலசுப்பிரமணியம் அவர்கள் காவல் ஆய்வாளர்கள் அன்பழகன் பார்த்திபன் காவல் உதவி ஆய்வாளர்கள் செல்வராஜ் குப்புசாமி பாருக் ஆகியோர் கலந்து கொண்டனர்

