இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி ஆட்சியரிடம் மனு.
இந்திரா நகரில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க கோரி அக்கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கி.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி ஒன்றியம் செட்டிகரை ஊராட்சி இந்திரா நகரில் 100 க்கும்மேற்பட்ட குடும்பங்கள் உள்ளனர்.இவர்கள் நிலமற்ற விவசாய கூலி தொழிலாளர்கள்.இங்கு அடிப்படை வசதி இல்லாமல் இருந்துவந்தது. இதனையடுத்து சாலை குடிநீர் கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்க வேண்டுமென அக்கிராம மக்கள் அதிகாரிகளிடம் கோரிக்கைவைத்து முறையிட்டதின் அடிப்படையில் இந்திரா காலணிக்கு தெருசாலையும் கழிவுநீர் கால்வாய் அமைக்கும் பணியை சில மாதங்களுக்கு முன் துவங்கினர்.இங்கு ஜல்சக்தி திட்டத்தின் மூலம் குடிநீர் வினியோகம் செய்தநிலையில் சாலை அமைக்கும் பணியின் போது குடிநீர் குழாய் சேதமடைந்தது. இதனால் இங்கு குடிநீர் வருவதில்லை. ஊராட்சியின் மூலம் வழங்கப்படும் தண்ணீரும் இங்கு வருவதில்லை, ஒகேனக்கல் குடிநீரும் வருவதில்லை.சாலை அமைக்கும் போது குடிநீர் குழாய் சேதமடைந்ததால் குடிநீர் இன்றி கடந்த 2 மாதங்களாக சிரமப்பட்டு வருகின்றனர்.

இம்மக்கள் குடிநீருக்காக விவசாய கிணறுகளுக்கு சென்று குடிநீர் எடுத்துவர வேண்டியுள்ளது.
எனவே குடிநீர் பிரச்சனையை தீர்க்க இந்திரா நகருக்கு மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைத்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டுமென மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

