தூத்துக்குடி எம்.பியாக மக்களவையில் கனிமொழி கருணாநிதி பதவியேற்றுக்கொண்டார்
18வது மக்களவையில், திமுக துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி கருணாநிதி மக்களவை உறுப்பினராகப் பதவியேற்றுக் கொண்டார். தற்காலிக சபாநாயகர் ராதா மோகன் சிங் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
தூத்துக்குடி நாடாளுமன்றத் தேர்தலில் 2 முறையாக அதிக வாக்குகள் வித்தியாசத்தில் கனிமொழி கருணாநிதி வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அதிமுக சார்பில் சிவசாமி வேலுமணி, தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் எஸ்.டி.ஆர்.விஜயசீலன், நாம் தமிழர் கட்சி சார்பில் ரௌனா ரூத் ஜெனி ஆகியோர் போட்டியிட்டனர். கனிமொழியை எதிர்த்து போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.
இதன் மூலம் கனிமொழி கருணாநிதி 3 லட்சத்து 92 ஆயிரத்து 738 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். தூத்துக்குடி தொகுதியில் மற்ற வேட்பாளரை விட கனிமொழி கருணாநிதி 72.65 சதவீத வாக்கு வித்தியாசம் பெற்ற ஒரே வேட்பாளர் என்ற பெருமையைப் பெற்றார்.

