சிறுமி பாலியல் பலாத்காரம் கார் டிரைவருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியைச் சேர்ந்தவர் ஜான்( 37). கார் டிரைவர். இவருக்கும் தருமபுரி அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமிக்கும் அறிமுகம் ஏற்பட்டது.
கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அந்த சிறுமியை ஜான் வலுக்கட்டாயமாக காரில் கடத்திச் சென்று சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்தார். சிறுமி மாயமானது தொடர்பாக பெற்றோர் அளித்த புகார் குறித்து அதியமான் கோட்டை போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் சிறுமியை ஜானிடமிருந்து மீட்டனர்.இதுதொடர்பாக கடத்தல் மற்றும் போக்சோ சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கு விசாரணை தருமபுரி சிறப்பு போக்சோ கோர்ட்டில் நடந்தது. அப்போது குற்றச்சாட்டு உறுதியானதால் ஜானுக்கு 10 ஆண்டு சிறை தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சிவஞானம் தீர்ப்பு அளித்தார்.
