குடும்ப ஓய்வூதியம் பெற்றுத்தர ரூ 500 லஞ்சம் பெற்ற முன்னாள் அலுவலக உதவியாளருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை.
குடும்ப ஓய்வூதியம் பெற்றுதர ஏற்பாடு செய்ய ரூ.500/- கையூட்டு கேட்டு பெற்ற பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலக முன்னாள் உதவியாளர் உதயகுமார் என்பவருக்கு 1 ஆண்டு சிறை தண்டனை வழங்கி தருமபுரி குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது..
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், நெருப்பூர் கிராமம், நாகமரை பஞ்சாயத்தைச் சேர்ந்தவர் குள்ளப்பன் மகன் ராஜேந்திரன். இவரது மாமனார் மாரிமுத்து நாகமரை மேல்நிலை நீர்தேக்க தொட்டி இயக்குநராக பணிபுரிந்து 22.11.2007 அன்று இறந்துவிட்டார். இறந்த மாரிமுத்துவின் மனைவி முத்துலட்சுமி அவர்களுக்கு அரசிடமிருந்து குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்யும்பொருட்டு, பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உதவியாளர் உதயகுமார் அவர்களை, ராஜேந்திரன் 27.01.2009 28.01.2009 ஆகிய தேதிகளில் சந்தித்துள்ளார். அவ்வாறு சந்தித்தபோது, முத்துலட்சுமி அவர்களுக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்க ஏற்பாடு செய்ய கோப்பு தயார் செய்து சென்னை AG office-க்கு அனுப்பி வைக்க உதவியாளர் உதயகுமார் ரூ.1000/-ம் கையூட்டு கேட்டு, பின்னர் புகார்தாரர் கெஞ்சி கேட்டதால் ரூ.500/- கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால் பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலத்தின் உதவியாளர் உதயகுமார் அவர்களுக்கு ரூ.500/- லஞ்சமாக கொடுத்து வேலையை முடிக்க விருப்பம் இல்லாத ராஜேந்திரன் தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்குமாறு 30.01.2009-ம் தேதி அன்று தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவில் கொடுத்த புகாரின்பேரில், வழக்குபதிவுசெய்யப்பட்டு, தருமபுரிஊழல்தடுப்புமற்றும்கண்காணிப்பு பிரிவினரால்பொறி வைத்து பிடிக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அந்த நடவடிக்கையின்போது 30.01.2009-ம் தேதி பென்னாகரம் வட்டார வளர்ச்சி
அலுவலகத்தில் வைத்து புகார்தாரர் ராஜேந்திரன் அவர்களிடமிருந்து ரூ.500/-ஐ உதயகுமார் அவர்கள் லஞ்சம் பெற்றபோது தருமபுரி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு, காவல் ஆய்வாளர் அவர்களால் கையும் களவுமாக பிடிக்கப்பட்டு,கைது செய்யப்பட்டார்.
இது தொடர்பான வழக்கு விசாரணை தருமபுரி சிறப்பு நீதிபதி / தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் 13 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில், விசாரணை முடிவுற்று இன்று 25.06.2024-ம் தேதி கனம் சிறப்பு நீதிபதி மற்றும் தலைமை குற்றவியல் நடுவர் சந்தோஷ் அவர்கள், வழக்கின் எதிரி .உதயகுமார் அவர்களுக்கு ஊழல் தடுப்பு சட்டம், 1988-ன்படி சட்ட பிரிவு 13(2) r/w 13(1) (d)-ன் கீழ் 1 ஆண்டு சாதாரண தண்டணையுடன் அபராதம் ரூ.1,000/- விதித்தும், அபராதத்தொகை கட்ட தவறினால் 1 மாதம் சாதாரண தண்டணையும் வழங்கி (மொத்த அபராதத்தொகை ரூ.1,000/-) உத்தரவிட்டுள்ளார்.

