15 – ஆவது, ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை துவக்க வலியுறுத்தி, போக்குவரத்து கழக, ஊழியர் சங்கத்தினர், உண்ணாவிரதப் போராட்டம்.
தருமபுரி ஜூன்-24,
போக்குவரத்து கழக தொழிலாளர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி, சிஐடியு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பொதுமேலாளர் அலுவலகம் முன்பு, 24 மணிநேர உண்ணாவிரதப் போராட்டம் துவங்கியது.

போக்குவரத்து கழகங்களின் வரவுக்கும், செலவுக்குமான பற்றாக்குறையை ஈடுசெய்ய பட்ஜெட்டில் நிதி ஒதுக்கவேண்டும். 15-வது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தையை உடனே துவக்கவேண்டும். 2022 டிசம்பர் முதல் ஓய்வுபெற்ற தொழிலாளியின் , பிஎஃப், கிராஜீவிட்டி தொகைகளை உடனே வழங்கவேண்டும்.
போக்குவரத்து ஓய்வூதியருக்கு 2015 முதல் நிறுத்தப்பட்டுள்ள 103 மாத டிஏ உயர்வை வழங்கவேண்டும்.அனைத்து பிரிவுகளிலும் உள்ள காலிப்பணியிடங்களை உடனே நிரப்பவேண்டும்.காண்ட்ராக்ட் முறையை கைவிடவேண்டும்.சமூகநீதியை நிலைநாட்டவேண்டும்.வாரிசு வேலை உடனே வழங்கவேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்து, பழைய பென்சன் திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.
பராமரிப்புக்கு தேவையான தரமான உதிரி பாகங்களை வாங்கி கொடுக்கவேண்டும்.காலாவதியான பேருந்துகளை வழித்தடத்தில் இயக்ககூடாது.அற்ப, சொற்ப காரணங்களை காட்டி அநியாய தண்டனைகள் வழங்க கூடாது.
வழித்தட முறிவுக்கு டெக்னிக்கல் தொழிலாளர்களை காரணமாக்கி மெமோ கொடுத்து தண்டனை வழங்குவதை கைவிடவேண்டும்.அவசிய தேவைக்குக்கூட விடுப்பு மறுத்து, ஆப்சென்ட் போட்டு, சம்பள வெட்டு செய்யகூடாது.உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.
உண்ணாவிரதப் போராட்டத்துக்கு மண்டல தலைவர் சி.முரளி தலைமைவகித்தார்.
சிஐடியு மாவட்ட செயலாளர் பி.ஜீவா துவக்கிவைத்து பேசினார்.
சிஐடியு மாநிலசெயலாளர் சி.நாகராசன் சிறப்புறையாற்றினார்.
மண்டல பொதுச்செயலாளர் எஸ்.சண்முகம் ,மண்டல செயல் தலைவர் சி.ரகுபதி ,மண்டல துணைத்தலைவர் வி.மணோன்மணி, ஆகியோர் ஆகியோர் கோரிக்கைகளை வாழ்த்திபேசினர்.
சிஐடியு மின் ஊழியர் மத்திய அமைப்பின் மாவட்ட செயலாளர் தீ.லெனின்மகேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சோ.அருச்சுணன்,மலைவாழ் மக்கள் சங்க மாவட்ட செயலாளர் கே.என்.மல்லையன்,மருந்து விற்பனைகள் சங்க மாவட்ட செயலாளர் செல்வம்,ஆட்டோசங்க மாவட்ட பொருளாளர் ராஜகோபால் சிஐடியு நிர்வாகி பி.ஆறுமுகம் ஆகியோர் வாழ்த்திபேசினர்.

