கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு கேட்டு ஆட்சியரிடம் மனு.
தருமபுரி ஜூன்-24,
கலைஞரின் கனவு இல்ல திட்டத்தில் வீடு வழங்க வலியுறுத்தி கே.புதூர் காட்டுவளவு கிராம மக்கள் தருமபுரி மாவட்ட ஆட்சியர் கே.சாந்தியிடம் மனுகொடுத்தனர்.
மனுவின் விபரம் பின்வருமாறு
தருமபுரி மாவட்டம் பெண்ணாகரம் வட்டத்திற்குற்குட்பட்டது.கெண்டையன அள்ளி ஊராட்சி இவ்ஊராட்சிக்கு உட்பட்டது கே.புதூர் காட்டுவளவு இங்கு அருந்ததிய ஆதிதிராவிடர் உள்ளிட்ட மாற்றுச்சமூகத்தினர் வசித்து வருகின்றனர்.இங்கு வசித்து வரும் அனைத்து சமுகத்தினரும் நிலமற்ற ஏழைகள் வறுமைகோட்டின் கீழ் வாழ்கின்றனர்.கூலிவேலை செய்து தங்கள் வாழ்வாதாரத்தை நடத்திவருகின்றனர்.எனவே இப்பகுதியில் உள்ள அருந்ததியர் ஆதிதிராவிடர் உள்ளிட்ட வருமைகோட்டின் வாழும் அனைத்து சமூக மக்களுக்கும் கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வழங்கவேண்டும் என மனுவில் குறிப்பிட்டுள்ளனர்.

