கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய திமுக அரசை கண்டித்து அதிமுகவின் ஆர்ப்பாட்டம்
கள்ளக்குறிச்சியில் கள்ளசாராய உயிரிழப்புக்கு காரணமான திமுக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அதிமுக.சார்பில் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.

கடந்த வாரம் கள்ளக்குறிச்சி அருகே விசசாராயம் அருந்தி உயிரிழந்த சம்பவம் நடந்தது கள்ளசாராயத்தை கட்டுபடுத்த தவறிய திமுக அரசை கண்டித்து தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அதிமுக மாவட்ட செயலாளரும் முன்னாள் அமைச்சருமான கே.பிஅன்பழகன் எம்எல்ஏ தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர்கள் கோவிந்தசாமி, சம்பத்குமார் மாநில விவசாய பிரிவு தலைவர் டிஆர்.அன்பழகன் ,முன்னாள் அமைச்சர் வ.முல்லைவேந்தன் ,மாவட்ட அம்மா பேரவை செயலாளர் எஸ்.ஆர். வெற்றிவேல்,

தருமபுரி நகர கழக செயலாளர் பூக்கடை ரவி உள்ளிட்ட கழக நிர்வாகிகள் ஏராளமான தொண்டர்கள் பங்கேற்று திமுக அரசிற்கு எதிரான கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டம் செய்தனர்.

