சிட்லிங் கிராம மக்களிடம் கள்ளச்சாரயத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து எஸ்பி விளக்கம்
தருமபுரி மாவட்ட காவல்துறை சார்பாக அருள் உட்கோட்டம் கோட்டப்பட்டி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சிட்டிலிங் கிராமத்தில் பொதுமக்கள் இடையே தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசு பாதம் அவர்கள் போதைப் பொருள் மற்றும் கள்ளச்சாராயம் ஏற்படும் தீமைகள் குறித்தும் ,அரசால் தடை செய்யப்பட்ட போதைப் பொருள்கள் வரும் பின் விலைகள் பற்றியும், மக்களுக்கு எடுத்துக் கூறினார்.

மேலும் தங்கள் பகுதியில் ஏதேனும் இதன் சம்பந்தமாக யாரேனும் கள்ளச்சாராயம் மற்றும் போதைப் பொருள்கள் விற்பனை செய்தால் தாங்கள் நேரடியாக அவருக்கு தொலைபேசி மூலமாகவும் அல்லது whatsapp மூலமாகவும் தகவல் தெரிவிக்கலாம் என பேசினார்.

மேலும் அருள் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பொம்மனூர் மற்றும் சித்தேரி ஆகிய மலைப்பகுதியில் வாழும் மக்களிடையே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் அரூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் மதுவிலக்கு அமலாக்க பிரிவு காவல் துறை கண்காணிப்பாளர் ரமேஷ் காவல் ஆய்வாளர் வசந்தா காவல் உதவி ஆய்வாளர் சீனிவாசன் ஆகியோர் கலந்து கொண்டனர்

