தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்ககோரி மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்.
தமிழகத்திற்கு நீட்தேர்விலிருந்து விலக்குஅளிக்ககோரி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஏ.குமார் தலைமைவகித்தார்.மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.சிசுபாலன் ,மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.மாரிமுத்து எம்.முத்து ,எஸ்.கிரைஸாமேரி,வே.விசுவநாதன்,ஆர்.சின்னசாமி வி.ரவி ஆர்.மல்லிகா,தி.வ.தனுசன்,ஒன்றியசெயலாளர்கள் தருமபுரி நகரம் சி.முரளி,ஒன்றியம் கே.கந்தசாமி,பென்னாகரம் நகரம் ஆர்.வெங்கடாச்சலம்,சின்னம்பள்ளி ஜி.சக்திவேல்,ஏரியூர் என்.பி.முருகன்,ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

நீட்தேர்வு முறைகேடு குறித்து புலன்விசாரணை நடத்தவேண்டும்.இந்த ஆண்டு மாணவர் சேர்க்கையை தமிழ்நாடு அரசே நடத்தி கொள்ள அனுமதியளிக்க வேண்டும்.தமிழகத்திற்கு நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

