தருமபுரி : ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் 2024 ஆம் ஆண்டின் 2-வது காலாண்டு மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 20.06.2024 அன்று நடைபெற்றது.

உடன் மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) திரு.சையது முகைதீன் இப்ராகிம், அரூர் வருவாய் கோட்டாட்சியர் திரு.வில்சன் ராஜசேகர், காவல் துணை கண்காணிப்பாளர்கள், நலக்குழு உறுப்பினர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
