கள்ளச்சாராய விற்பனையை ஒழிக்க கோரி மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம்.
கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளவேண்டுமென வலியுறுத்தி அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி பிஎஸ்என்எல் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கள்ளக்குறிச்சி மாவட்டம், கருடாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் உடல்நலம் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனைகளில் உள்ளனர். கள்ளச்சாராயம் காய்ச்சுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், கள்ளச்சாராயத்தை அறவே ஒழிக்கவும் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.
கள்ளச்சாராயம் குடித்து உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்.ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு தரமான உயர் சிகிச்சை வழங்கிடுவதோடு, உரிய நிவாரணம்
வழங்க வேண்டும்.
கள்ளச்சாராய வியாபாரிகள் மற்றும் கடமை தவறிய காவல்துறையினர் உட்பட தவறிழைத்தவர்கள் அனைவரின் மீதும்
பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும், கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்காக தமிழகம் முழுவதும் மாவட்ட அளவில் கூடுதல் கண்காணிப்பாளர் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள மதுவிலக்கு தனிப்பிரிவை தீவிரப்படுத்தவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமைவகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி,கே.சுசிலா,பி.கிருஷ்ணவேணி,தனலட்சுமி , ஒன்றிய தலைவர் ஆர்.தமிழ்மணி,ஒன்றியசெயலாளர் எம்.மீணாட்சி ,மற்றும் ரங்கநாயகி,வள்ளி ஆகியோர் பேசினர்.
