தருமபுரி கேந்திர வித்யாலயா பள்ளியில் சர்வதேச யோக தின சிறப்பு நிகழ்ச்சி
இந்திய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மத்திய மக்கள் தொடர்பு கள அலுவலகம் மற்றும் கேந்திரிய வித்யாலயா இணைந்து இன்று தருமபுரி கேந்திரிய வித்யாலயா பள்ளி வளாகத்தில் சர்வதேச யோகத்தின சிறப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

நிகழ்ச்சியில் கேந்திரிய வித்யாலயா பள்ளியின் முதல்வர் டி.எஸ். மீனா தலைமையுறையாற்றுகையில்:
யோகா என்பது எளிய முறையில் நோய்களை குணமாக்க கூடியது என்றும் யோகா பயிற்சிகளை தினந்தோறும் செய்துவந்தால் உடல் வலிமையாகவும் மனம் தூய்மையாகவும் மருந்து மாத்திரைகளின் தேவை இருக்காது என்று கூறினார்.

இந்நிகழ்ச்சியில் யோகா குறித்து யோகா வல்லுநர் பி. மலர்விழி மாணவர்களுக்கு எடுத்துரைத்து யோகாசனங்களை செய்து காட்டினார். மாணவ மாணவியர் உற்சாகமாக கலந்து கொண்டு யோகா பயிற்சிகளை ஆர்வமுடன் செய்தனர்.

முன்னதாக எம். தியாகராஜன், கள விளம்பர உதவியாளர் வரவேற்புரையாற்றினர். நிகழ்ச்சியில் யோகா குறித்த கையேடு வெளியிடப்பட்டு மாணவர்களுக்கு விநியோகிக்கப்பட்டது.இந்திய அரசின் இசை நாடக பிரிவில் பதிவு பெற்ற பாரதி கலை குழுவினரின் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது.
இறுதியாக ஆசிரியர் கீதா கோபாலன் நன்றிகூறினார்.
