தருமபுரி அரசு கலைக் கல்லூரியில் சர்வதேச யோகா தின விழா
தருமபுரி அரசு கலைக் கல்லூரி புதிய கலையரங்கில், கல்லூரியின் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம் அலகு, உடற்கல்வித்துறை மற்றும் ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யும் இணைந்து10-வது சர்வதேச யோகா தினம் கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் கல்லூரி முதல்வர் முனைவர் கோ.கண்ணன் தலைமைவகித்தார். தருமபுரி மண்டல கல்லூரி கல்வி இணை இயக்குனர் முனைவர் பி.சிந்தியா செல்வி மாணாக்கர்களுக்கு யோகாவின் முக்கியத்துவம் குறித்து பேசினார். வழங்கினார். முன்னதாக கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர் முனைவர் கு பாலமுருகன் வரவேற்றார். முனைவர் டி.ஜெயப்பிரியா நிறுவன ஜெயம் யோகா டிரஸ்ட் தருமபுரி யோகா கருத்தாளராக கலந்து கொண்டு மாணாக்கர்களுக்கு சூரிய நமஸ்காரம், யோகாசனங்கள், எளிய முறை உடற்பயிற்சி,
மூச்சுப் பயிற்சி, முத்திரைகள், தியான முறைகள்உள்ளிட்ட பயிற்சிகளை செயல்முறை விளக்கத்துடன் வழங்கினார்.

தருமபுரி அரசு கலைக் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் முனைவர் ஆர். சந்திரசேகரன் , முனைவர் பி குப்புசாமி முனைவர் எம். ராஜாராம், பி கயல்விழி தேசிய மாணவர் படை அலுவலர்கள் ஜெயம் பொறியியல் கல்லூரி மேஜர் பி முருகன், லளிகம் அரசு மேல்நிலைப் பள்ளி எம் சக்கரவர்த்தி, கம்பைநல்லூர் அரசு மேல்நிலைப்பள்ளி கே பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்வில் 300 மேற்பட்ட மாணவர்களும்பேராசிரியர்களும் பங்கேற்றனர். தருமபுரி அரசு கலைக்கல்லூரி தேசிய மாணவர் படை அலுவலர் ஏ.தீர்த்தகிரி நன்றி கூறினார்.

