சத்துணவு ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க கோரி கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம்.
தருமபுரி ஜூன்-21,
காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு தர்ணா போராட்டம் நடைபெற்றது.
40 ஆண்டுகாலமாக நிரந்தரமாக செயல்படுத்தும் சத்துணவு திட்டத்தில் பணிபுரியும் ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும். அனைத்து சத்துணவு ஊழியர்களுக்கும் குடும்ப பாதுகாப்புடன் கூடிய ஓய்வூதியம் ரூ 9000 வழங்கவேண்டும். அமைப்பாளர்களுக்கு ரூ 5 இலட்சமும் சமையலர் சமையல் உதவியாளர்களுக்கு ரூ 3 இலட்சம் வழங்கவேண்டும்.தமிழ்நாடு சத்துணவு திட்டத்தில் காலியாக உள்ள 60 ஆயிரம் பணியிடங்களை நிரப்ப வேண்டும். காலை சிற்றுண்டி திட்டத்தை சத்துணவு திட்டத்துடன் இணைக்கவேண்டும். துறையில் 10,20,30 ஆண்டுகள் பணிமுடித்தவர்களுக்கு தேக்கநிலை சிறப்பு ஊதியம் வழங்கவேண்டும்.தகுதிவாயந்த சத்துணவு ஊழியர்களுக்கு அரசு துறைகளில் பணி வழங்கவேண்டும். சத்துணவு திட்டத்தில் கருணை அடிப்படையில் ஆண் வாரிசுகளுக்கும் பணி வழங்கவேண்டும்.கலாவதியான பொருட்களை நீக்கம் செய்யவேண்டும். மகப்பேறு விடுப்பு 12 மாதமாக உயர்த்தி வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

மாவட்ட தலைவர் தேவகி தலைமைவகித்தார் மாவட்ட செயலாளர் ஜே.அனுசுயா வரவேற்றார். மாநிலசெயலாளர் பெ.மகேஸ்வரி மாவட்ட பொருளாளர் ராமன் மாவட்ட நிர்வாகிகள் வளர்மதி மஞ்சுளா ஜெயா முன்னாள் மாவட்ட தலைவர் சி.காவேரி ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர். தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலதுணைத்தலைவர் கோ.பழனியம்மாள் ,மாவட்ட செயலாளர் ஏ.தெய்வானை முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர்,ஜாக்டோ ஜியோ மாவட்ட பொருளாளர் கே.புகழேந்தி அரசு ஊழியர் சங்க மாநிலசெயற்குழு உறுப்பினர் ஆர்.முருகன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

