கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்
கள்ளச்சாரயத்தை தடுக்க தவறிய தமிழ்நாடு அரசை கண்டித்து தருமபுரி மாவட்டம் பென்னாகரத்தில் புரட்சிகர மக்கள் அதிகாரம் அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்துக்கு வட்டார துணை செயலாளர் மாரியப்பன் தலைமை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சிவா, மாநில இணை செயலாளர் கோபிநாத் கண்டன உரையாற்றினார். வட்டார செயலாளர் சத்தியநாதன் நன்றிகூறினார்.
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராயத்தை தடுக்க தவறிய காவல்துறை தமிழ்நாடு அரசை கண்டித்து முழக்கங்கள் எழுப்பினர்.

