அரூரில் ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் இரண்டாம் நாள் நிகழ்ச்சியாக இன்று அதிகாலை அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் வருகை குறித்தும் பேரூராட்சி பகுதிகளுக்கு விநியோகிக்கப்படும் மேல்நிலை நீர் தேக்க தொட்டி மற்றும் நீர் விநியோகம் செய்யும் பணிகளையும் மாவட்ட ஆட்சியர் . கீ சாந்தி ஆய்வு செய்தார்

தொடர்ந்து அரூர் சிறப்பு நிலை பேரூராட்சி கோவிந்தசாமி நகர் பகுதியில் ரூ. 40,75,000 மதிப்பில் கட்டப்பட்டுள்ள சிறுவர் பூங்காவை ஆய்வு செய்து வளாகத்தில் கூடுதலாக மரக்கன்று நடும் பணிகளை துவக்கி வைத்தார்

அரூர் ஊராட்சி ஒன்றியம் அக்ரகாரம் ஊராட்சி ஆ விளாம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தில் உணவு சமைக்க பயன்படுத்தப்படும் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்து ஆய்வு செய்த மாவட்ட ஆட்சியர் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு தரமான உணவு சமைத்து உரிய நேரத்தில் பரிமாற வேண்டும் என்றும் பள்ளி வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க வேண்டும் என்றும் அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்

