தருமபுரி யானை தந்தம் கடந்த முயன்ற இருவர் கைது.
தருமபுரி வனக்கோட்டம். மொரப்பூர் வனச்சரகம், கம்பைநல்லூர் – வெதரம்பட்டி சாலையில் வாகன சோதனையில் யானை தந்தம் கடத்த முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர்.
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார் அவர்களுக்கு கிடைத்த இரகசிய தகவலின்படி, 18.06.2024ம் தேதி மாலை கடத்தூர் பிரிவு வனவர்,பா.செந்தில்குமார், வனக்காப்பாளர்கள் ஜி.முனியாண்டி, எ.ஹேமசுந்தர் ஆகியோர் கொண்ட குழுவுடன் கம்பைநல்லூர் வெதரம்பட்டி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போது சந்தேகத்திற்குறிய வாகனம் Maruthi Suzuki Eco நான்கு சக்கர வாகனம் எண். TN 30 CW 2142 ஐ நிறுத்தி சோதனை செய்தபோது வாகனத்தில் இரண்டு நபர்கள் இரண்டு யானை தந்தங்களை எடுத்து வந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர் அவர்களை விசாரணை செய்ததில் (1) விக்னேஷ் த/பெ சீனிவாசன் வயது 23. கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் (2) முரளிதரன் த/பெ.சின்னமயில் வயது 32, கோவலன்காடு கிராமம், கட்சுப்பள்ளி அஞ்சல், எடப்பாடி வட்டம், சேலம் மாவட்டம் எனவும் தெரிவித்தனர் பின்னர் விசாரணை மேலும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பின்னர் பிடிப்பட்ட விக்னேஷ் மற்றும் முரளிதரன் என்பவர்களை தருமபுரி வனக்கோட்ட மாவட்ட வன அலுவலர், கா.இராஜாங்கம், ஆணைப்படியும், உதவி வனப்பாதுகாவலர் சி.சரவணன், அரூர் அவர்களின் ஆலோசனையின்படியும் காரிமங்கலம் நீதிமன்ற நடுவர் முன்னிலையில் ஆஜர்படுத்தி எதிரிகள் இருவரையும் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது.

