நல்லம்பள்ளியில் உழவர் சந்தை அமைக்கவேண்டும்.பொருளாதாரத்தில் பின் தங்கியுள்ள ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்கள் மிக குறைந்த அளவு கட்டணம் செலுத்தி குடும்ப நிகழ்ச்சிகள் பொதுநிகழ்ச்சிகள் செய்வதற்கு ஏதுவாக இருக்க அனைத்து மக்களும் பயன்படுகின்ற வகையில் பொதுச் சமுதாயக்கூடம் (பராமரிப்புடன்) அமைக்கவேண்டும்.நல்லம்பள்ளி வட்டாரமான பிறகு வட்டாரத்திற்கென்று அரசுவழங்கும். அரசு அலுவலகங்களான சார்பதிவாளர் அலுவலகம் DSP அலுவலகம், LIC அலுவலகம் வனச்சரக அலுவலகம் அமைத்திட வேண்டும்.
நல்லம்பள்ளி அனைத்து வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளி ஏரியில் குழந்தைகள் மற்றும் சிறுவர் பூங்கா அமைக்க வேண்டும் நல்லம்பள்ளியிலிருந்து பல்வேறு நகரங்களுக்கும் கிராமங்களுக்கும் வெளியூர் சென்று வர இரவுநேரங்களில் பேருந்து வசதி இல்லாத சூழல் இருக்கின்றது. எனவே தருமபுரியிலிருந்து நல்லம்பள்ளி வரை இரவு நேர நகரப்பேருந்து விட வேண்டும். நல்லம்பள்ளியில் வனபாதுகாப்பு அலுவலகம் மற்றும் குடியிருப்பு வீடுகள் அமைத்திட வேண்டும்.
நல்லம்பள்ளியிலிருந்து பொம்மிடி வரை (இலளிகம் வழி போக்குவரத்து சாலை விரிவுப்படுத்தி போக்குவரத்துசாலை அமைக்க வேண்டும்.நல்லம்பள்ளியில் கிளை நூலகம் அமைக்கவேண்டும்ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தினை தருமபுரி மாவட்டத்திலுள்ள அனைத்து எரிகளுக்கும் நீர்பாசனம் செய்து விவசாயத்தை காத்திட வேண்டும்.அதியமான்கோட்டை காலபைரவர் கோவிலில் அறங்காவலர்குழு உறுப்பினராக நல்லம்பள்ளியை சார்ந்த இரு நபர்களை நியமனம் செய்ய வேண்டும்.நல்லம்பள்ளி சேலம் மெயின் ரோட்டிலிருந்து விநாயகர் கோவில் வழியாக சிவாடி இரயில்வே நிலையத்திற்கு மினி பேருந்து விட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசும் மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தீர்மானம்நிறைவேற்றப்பட்டது.மு.வீரமணி நன்றி கூறினார்.

