மனு அளித்த ஒரேநாளில் 5 நரிக்குறவர் இன மக்களுக்கு ரூ 1.25 இலட்சம் கடனுதவி ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ” உங்களைத் தேடி உங்கள் ஊரில் ” திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், அரூர் ஊராட்சி ஒன்றியம் தொட்டம்பட்டி ஊராட்சியில் ஆய்வின் போது திருப்பதி மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்கள் ஊசி மணி, பாசிமணி மற்றும் கவரிங் நகை மற்றும் கவரிங் ஆபரண நகைகள் தயார் செய்து தொழில் தொடங்குவதற்கு கடன் கேட்டு மனு அளித்தனர்.
அதன் அடிப்படையில், உடனடியாக பரிசீலனை செய்து, இன்றைய தினமே (19.06.2024) அனைத்து துறை அலுவலர்களுக்கான ஆய்வுக் கூட்டத்தில் 5 நரிக்குறவ இன மகளிருக்கு ரூ.1.25 இலட்சம் கடனுதவிகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்டீபன் ஜேசுபாதம், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) / மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் கௌரவ்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் செ.பால்பிரின்ஸ்லி ராஜ்குமார், அரூர் வருவாய் கோட்டாட்சியர் வில்சன் ராஜசேகர்,மகளிர் திட்ட இயக்குனர் திரு. பத்ஹூ முகம்மது நசீர், மகளிர் திட்டம் உதவி திட்ட அலுவலர்கள் முருகேசன், தசந்தோஷம் ஆகியோர் உள்ளனர்.

