மொரப்பூர் காவல்நிலையத்தில் மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு பொதுமக்கள் அளிக்கும் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல்நிலையம் மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி ஆய்வு மேற்கொண்டார்.

உங்களைத் தேடி உங்கள் ஊரில் – திட்டத்தின் கீழ் மொரப்பூர் காவல் நிலையத்தில் உள்ள சிசிடிவி கேமரா செயல்பாடுகள், வழக்குகள் பதிவு செய்த பதிவேடுகள் துப்பாக்கி லைசென்ஸ் பராமரிக்கப்படும் பதிவேடு மற்றும் வருகை பதிவேடு ஆண்கள் மற்றும் பெண்கள் கைதி அறைகளை ஆய்வு செய்தார்.குற்றவாளிகள் பிடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்து பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி காவல் ஆய்வாளரிடம் கேட்டறிந்தார்
மேலும் பொதுமக்கள் அளிக்கும் புகார் மனுக்கள் மீது விசாரணை செய்து சட்டப்படி உடனுக்குடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

அதனை தொடர்ந்து மொரப்பூர் வருவாய் ஆய்வாளர் அலுவலகத்தில் ஆய்வு செய்து அலுவலகத்தில் பராமரிக்கப்பட்டு வரும் பதிவேடுகள் மற்றும் வருவாய் வட்டத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நிலுவையில் உள்ள வீட்டுமனை பட்டா வழங்கும் பணிகள் உள்ளிட்ட நீண்ட நாள் கோரிக்கைகள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை குறித்து வருவாய்த்துறை அலுவலர்களிடம் கேட்டறிந்தார்

