‘நீட்’ தேர்வைக் கண்டித்து திராவிட மாணவர் கழகம் சார்பில் சென்னையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்.
ஒன்றிய அரசின் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி “இனியும் தேவையா நீட் தேர்வு” எனும் முழக்கத்தோடு திராவிட மாணவர் கழகம் சார்பில் வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் இரா. செந்தூரப் பாண்டியன் தலைமை தாங்கினார். மருத்துவக் கல்லூரி மாநில அமைப்பாளர் ப. நீலன் வரவேற்புரையாற்றினார்.

திராவிடர் கழகத் துணைத் தலைவர், கவிஞர் கலி. பூங்குன்றன் தொடக்க உரையாற்றினார்.

இந்த ஆர்ப்பாட்டத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திமுக செய்தி தொடர்பு குழு தலைவர் டி.கே.எஸ் இளங்கோவன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கு செல்வ பெருந்தகை, விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் இரா. முத்தரசன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் தோழர் கே. பாலகிருஷ்ணன், மதிமுக கொள்கை விளக்க மாநில செயலர் ஆ.வந்தியத்தேவன், மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லா, இந்திய முஸ்லிம் லீக் மாநில பொதுச் செயலாளர் முகமது அபுபக்கர், திராவிடர் இயக்க தமிழர் பேரவை தலைவர் பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பொது பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச் செயலாளர் கல்வியாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு உள்ளிட்ட தலைவர்கள் கண்டன உரை நிகழ்த்தினர். இந்நிகழ்வில் சட்டக் கல்லூரி மாநில அமைப்பாளர் இளமாறன் நன்றி கூறினார்.

