தருமபுரி எம்பி ஆ.மணி பணி சிறக்க வாழ்த்திய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
மக்களவைத் தேர்தல் 2024 – ல் தருமபுரியில் போட்டியிட்டு வெற்றிக் கொடி நாட்டிய நமது தி.மு.கழக நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.மணி அவர்களையும், நாமக்கல்லில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியைச் சேர்ந்த சகோதரர் மாதேஸ்வரன் அவர்களையும் இன்று நேரில் வாழ்த்தினோம்.

தமிழ்நாட்டின் உரிமைகளை பாதுகாக்கின்ற வகையிலும், பாசிசத்தை வீழ்த்திடும் முனைப்புடனும் செயலாற்றவுள்ள அவர்களின் பணிகள் சிறக்கட்டும். என அமைச்சரும் திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்
