குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க கோரி மாதர் சங்கம் மக்கள் சந்திப்பு பிரச்சாரம்.
தருமபுரி ஜூன்-18,
குழந்தைகள் மீதான வன்முறையை தடுத்து நிறுத்த கோரி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில், தருமபுரி பேருந்து நிலையத்தில் மக்கள் சந்திப்பு பிரச்சாரம் நடைபெற்றது.
சமீப காலமாக குழந்தைகள் மீதான வன்முறை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. குறிப்பாக பெண்குழந்தைகள் மீதான வன்முறை வீடுகளில், பள்ளிகளில் பொது இடங்களில் எல்லா இடங்களிலும் ஏதாவது ஒரு நிலையில் வன்முறை சமபவம் நடந்து வருகிறது.
குழந்தைகள் மீதான வன்முறையை தடுக்க, அரசும், சமூகமும், கூடுதல் பொறுப்போடும் அக்கறையோடும் செயல்படவேண்டியுள்ளது. குழந்தைகள் மீதான வன்முறை சம்பவத்தில் காவல்துறை உரிய சட்டபிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்வதும்.குற்றாவாளிகளுக்கு தண்டனை கிடைக்கும் வரை தொடர் கவனம் செலுத்துவதும், மருத்துவ பரிசோதனை அறிக்கைகளை உத்தரவாதப்படுத்தி நீதிமன்றத்தில் உரிய ஆவணங்கள் சமர்பிக்கவேண்டும்.பாதிக்கப்பட்ட குழந்தைகளின் குடும்பங்களுக்கு நியாயம் கிடைக்கும் வகையில் காவல்துறை செயல்படவேண்டும். ஆறுமாத்திற்குள் வழக்கை முடித்து தண்டனை கிடைக்கவேண்டும்.

மேலும்குழந்தைகள் மீதான வன்முறை நடக்க காரணமாக இருக்கும் போதை பொருட்களை முற்றிலுமாக தடுக்க வேண்டும்.பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு பாலியல்கல்வி குறித்து சிறப்பு பயிற்சி அளிக்கவேண்டும். தமிழகத்தில் குழந்தைகள் நல ஆணையம் செயல்படாமல் உள்ளது.உடனடியாக ஆணையத்திற்கு தலைவரை நியமிக்கவேண்டும்.குழந்தைகள் மகிழ்ச்சியாக வாழ அரசும் பெற்றோரும் சமூகமும் இணைந்து குரல் எழுப்ப வேண்டும் என வலியுறுத்தி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரி மாவட்டம் முழுவது ஜூன் 17 முதல் 22வரை பிரச்சாரம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக தருமபுரி பேருந்து நிலையத்தில் பிரச்சாரம் நடைபெற்றது மாதர் சங்க மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி ,மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி,கே.சுசிலா தருமபுரி ஒன்றியசெயலாளர் எம்.மீணாட்சி ,ஆகியோர் கல்லூரி மற்றும் பள்ளிமாணவர்கள் பொதுமக்களிடம் பிரச்சாரம் மேற்கொண்டனர்.
