மின்வாரியத்தில் கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பகோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்.
தருமபுரி ஜூன்-18, தமிழ்நாடு மின்வாரிய கணக்கீட்டு பிரிவு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி சிஐடியு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் தருமபுரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கணக்கீட்டு பிரிவில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பவேண்டும். கணக்கீட்டு பணி செய்திட கைபேசி / டேப் வழங்கவேண்டும். மொபைல் டேட்டா ரீசார்ஜ் செய்ய மாதம் தோறும ரூ. 500/- வழக்கவேண்டும்.கணக்கீட்டு பிரிவு ஊழியர்களுக்கு முறையே பதவி உயர்வு வழங்கவேண்டும். கணக்கீட்டாளர்களுக்கு இரண்டான்டுகளாக நிறுத்தி வைத்துள்ள விருப்ப இடமாறுதல் உத்தரவு வழங்கவேண்டும். ஸ்மார்ட் மீட்டர் திட்டத்தை தனியாரிடம் விடக்கூடாது.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட துணைத்தலைவர் எம்.ஆறுமுகம் தலைமைவகித்தார். மாநிலதுணைத்தலைவர் பி.ஜீவா, மாவட்ட செயலாளர் தீ.லெனின்மகேந்திரன், பொருளாளர் திம்மராயன், மாவட்ட இணைசெயலாளர் கே.ஜெகநாதன், ஏ.கோவிந்தன், ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.

