சமூகநலத்துறை பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வலியுறுத்தல்
தமிழ்நாடு அரசு சமூகநலத்துறை பணியாளர் சங்கத்தின் மாவட்ட பேரவை கூட்டம் தருமபுரி சிஐடியு அலுவலகத்தில் நடைபெற்றது.

மாவட்ட தலைவர் வி.பழனிச்சாமி தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் வி.ஆர்.ஸ்டாலின் வரவேற்றார்.தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.தெய்வானை சிறப்புறையாற்றினார். முன்னாள் மாவட்ட செயலாளர் ஏ.சேகர் ஜாக்டோ ஜியோ நிதி காப்பாளர் கே.புகழேந்தி ,முன்னாள் மாவட்ட துணைத்தலைவர் சி.காவேரி ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

பேரவை கூட்டத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.மாவட்ட தலைவராக வி.பழனிச்சாமி,மாவட்ட செயலாளராக வி.ஆர்.ஸ்டாலின்,மாவட்ட பொருளாளர் வினோத்,மாவட்ட துணைத்தலைவர் ஆர்.தெய்வானை ,மாவட்ட இணைசெயலாளர் தமிழ்மணி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தவேண்டும்.முடக்கப்பட்ட சரண்டர்வழங்கவேண்டும்.அங்கன்வாடியில் இருந்து சமூகநலத்துறைக்கு பணிநியமன முறையில் செய்த பணியாளர்கள் மேற்பார்வை நிலை-1, சமூகநல விரிவாக்க அலுவலர் மேற்பார்வையாளர் நிலை -2 ,ஊர்நல அலுவலர் ஆகியோருக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.சமூகநலத்துறையில் பணியாற்றும்ஆண்கண்காணிப்பாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கவேண்டும்.

சமூகநலத்துறையில் பணிபுரியும் அலுவலர்,பணியாளர்களுக்கு உரியகாலத்தில்பணிவரன்முறைசெய்து பதவிஉயர்வு வழங்கவேண்டும்.துறை விரிவாக்கத்தின் போது அனைத்து நிலை பணியாளர்களுக்கும் பதவிஉயர்வு பகிர்ந்தளிக்கவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

