எட்டயபுர வரலாற்றை விவரிக்கும் வம்சமணிதீபிகை நூல்
எட்டயபுர வரலாற்றை நூலாக வெளியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் திரு.இளசை மணியன், திரு.வே.சதாசிவன், திரு.மா.ராஜாமணி ஆகீய மூவரும் ஆறு மாதங்கள் தொடர்ந்து உழைத்து இவ்வரலாற்று நூலை வெளியிட்டனர். அதன் பின்னர், சுவாமி திஷிதரின் வம்சமணிதீபிகை நூலைப் பதிப்பிக்க வேண்டும் என்ற ஆவலிலும் பாரதியாரின் கடிதம் ஏற்படுத்திய ஆர்வத்தினாலும் இந்த நூலின் பிரதியைத் தேடிய திரு.இளசை மணியன், ‘திருநெல்வேலி சரித்திரம்’ எழுதிய குருகுஹதாச பிள்ளை அவர்களின் குமாரர் கு.பக்தவச்சலம் அவர்களிடம் தனது விருப்பத்தை தெரிவித்திருக்கின்றார். தன்னிடம் இருந்த ஒரே பிரதியை திரு.இளசை மணியத்திடம் வழங்கி இப்பணியை ஆரம்பிக்குமாறு ஊக்கப்படுத்தியிருக்கின்றார் திரு.கு.பக்தவச்சலம்.
பாரதி எண்ணப்படி கடின தமிழ் நடையையும் பிழைகளையும் திருத்தி எளிய தமிழில் வெளியிட எண்ணம் கொண்டிருந்த இவர் பலரிடம் இது பற்றி கலந்து பேசிய போது அதனை அப்படியே மாற்றமில்லாமல் பதிப்பிக்குமாறு நண்பர்கள் தெரிவித்திருக்கின்றனர். அதில் குறிப்பாக தொ.மு.சி. ரகுநாதன் அவர்கள் எவ்வித திருத்தமும் செய்யாமல் மூல நூலை அப்படியே வெளியிட வேண்டும் என வற்புறுத்திக் கூறியதன் அடிப்படையில் மாற்றங்கள் இன்றி இந்நூலைப் பதிப்பித்துள்ளார் திரு.இளசை மணியன் அவர்கள்.
வம்சமணிதீபிகையின் மூலம் 1879ல் வெளிவந்துள்ளது. இந்த நூல் வாய்மொழிச் செய்திகள், அரண்மனையில் பாதுகாப்பில் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தொகுக்கப்பட்டது என்பது நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நூல்; வம்சமணிதீபிகை
வகைமை; வரலாறு
பதிப்பாசிரியர்; இளசை மணியன்
வெளியீடு; பரிசல்
விலை; 230
நூலைப் பெற; 9790443979

