பள்ளிக் கல்வித்துறையின் ஐம்பெரும் விழா: தமிழ்ப்புதல்வன் திட்டத்தை தொடங்கிவைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின்.
அரசுப்பள்ளிகளில் படித்த மாணவர்கள், கல்லூரிகளில் சேரும்போது மாதம் 1000 ரூபாய் வழங்குகிற ‘தமிழ்ப்புதல்வன்’ திட்டம் ஆகஸ்ட் மாதம் முதல் நடைமுறைக்கு வரவுள்ளது என்ற மகிழ்ச்சிக்குரிய அறிவிப்பை வெளியிட்டு, 22,931 திறன்மிகு வகுப்பறைகளை நம் முதலமைச்சர் திறந்து வைத்தார்கள்.

குறிப்பாக, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் தமிழ் பாடத்தில் நூற்றுக்கு நூறு எடுத்த மாணவச் செல்வங்களுக்கு தலா 10 ஆயிரம் ஊக்கத்தொகை மற்றும் பாராட்டுச் சான்றிதழ்கள் – பொதுத்தேர்வுகளில் 100 சதவீதம் அளவு மாணவ – மாணவியரை தேர்ச்சி பெற வைத்த அரசுப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்கள் – ஆசிரியர்களுக்கு கையடக்க கணினி உள்ளிட்டவற்றை வழங்கி நம் முதலமைச்சர் வழங்கி கவுரவித்தார்.

மேலும், முதலமைச்சர் அவர்கள், 67 ஆவது தேசிய விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை குவித்து தமிழ்நாட்டுக்கு பெருமை தேடித் தந்த அரசுப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி, எதிர்கால வீரர் – வீராங்கனையரை அடையாளம் காட்டியதற்காக, விளையாட்டு மேம்பாட்டுத்துறை பாராட்டி பெருமைப் படுத்தியது.
ஊக்கத்தொகை – பாராட்டுச்சான்றிதழ்களை பெற்ற ஆசிரியர் பெருமக்கள் – மாணவ – மாணவியருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

