புதிய பென்சன் திட்டத்தை கைவிடக் கோரி முதுநிலை பட்டதாரி கழகத்தினர் ஆர்ப்பாட்டம்
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்ய கோரி தமிழ்நாடு முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் சார்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்குமாநில துணைத்தலைவர் பி.கலைவாணன் தலைமை வகித்தார்.
மாவட்ட தலைவர் ஆர்.சக்திவேல்,மாவட்ட செயலாளர் டி.பாக்கியராஜ், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் எம்.சரவணன்,ஆர்.கருணாநிதி,மாவட் ட துணைத்தலைவர் சி.முருகன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கிபேசினர்.
மாவட்ட இணைச்செயலாளர்கள் எம்.ஜே.பாரதிதாசன்,கே.சிவா,மாநிலபொதுக்குழு உறுப்பினர்கள் ஆர்.சக்திவேல்,வெற்றிவேல்செல்வன்,கே.முருகன் ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்துசெய்யவேண்டும்.பழையபென்சன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு,மீண்டும் வழங்கவேண்டும். உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் பழைய முறையில் நடைமுறைப்படுத்துதல் வேண்டும்.
2009 க்கு பின்பு பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்பட்டுள்ள ஊதிய பேரிழப்பான ஊதிய முரண்பாட்டை சரி செய்திட வேண்டும்.
புதிய ஊதிய குழுவில் முதுகலை ஆசிரியருக்கு ஊதிய விகிதத்தில் உரிய அங்கீகாரத்தை அளிக்க வேண்டும். மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் பதவி உயர்வு நடத்திவிட்டு பொது மாறுதல் கலந்தாய்வு நடத்திடுவதை ஆண்டுதோறும் உறுதி செய்யவேண்டும். வேண்டும். கலந்தாய்வு விதிமுறைகளில் உபரி பணியிடத்தில் சென்றவர்களுக்கு முன்னுரிமையும் மாவட்ட கலந்தாய்வு offline வழியாக நடத்திடவும் வெளிமாவட்ட கலந்தாய்வில் உள்மாவட்ட காலிப் பணியிடங்கள் காட்டிடவும் மேலும் முதுகலை ஆசிரியர்களுக்கு ஏற்கனவே நடைமுறைப்படுத்திய கலந்தாய்வு சார்ந்த சாதகமான விதிமுறைகளை ஒவ்வொரு ஆண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும்.

ஆசிரியர் அரசு ஊழியர்களுக்கு நடைமுறையில் உள்ள புதிய மருத்துவ காப்பீடு திட்டத்தில் (NHIS) காப்பீட்டு நிறுவனங்களின் முறைகேடுகளை கண்டித்தும் மேலும் கட்டணம் இல்லா மருத்துவ சிகிச்சையை நடைமுறைப்படுத்தவேண்டும்.அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைக்கும் அனைத்து நடைமுறைகளும் வளங்களும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் கிடைத்திட தமிழக அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்
ஒவ்வொரு ஆண்டும் கல்விப் பணிகள் மேல்நிலைத் தொகுதியில் மன உளைச்சலுடன் பணியாற்றி முடித்தவுடன் உடல், மனம் ஓய்வு பெற்று புத்துணர்வுடன் அடுத்த ஆண்டு கல்விப் பணிகளை தொடங்கிட விடப்படுகின்ற கோடை விடுமுறையை பறிப்பதை ஏற்க முடியாது. 100% கோடை விடுமுறையை உத்தரவாதப்படுத்திட வேண்டும்.
அரசு பொது தேர்வுகளில் தோல்வி அடைந்த மாணவர்களுக்கு மாணவர் நலன் என்ற பெயரில் கோடை விடுமுறையில் சிறப்பு வகுப்பு எடுக்க சொய்து ஆசிரியர்களுக்கும் மாணவர்களுக்கும் மன உளைச்சலை உண்டாக்கும் செயலை கட்டாயம் தவிர்க்க வேண்டும்.
கற்றல் கற்பித்தல் பணிகளில் மட்டுமே ஆசிரியர்களை கல்வித்துறை ஈடுபடுத்த வேண்டும் EMIS உள்ளிட்ட கல்வி சாரா பணிகளில் ஆசிரியர்களை பயன்படுத்தக்
கூடாது S IFHRMS முறையில் வருமான வரியை தாமே பிடித்தம் செய்யும் நடைமுறையை கைவிட்டு பழைய நடைமுறையிலேயே வருமான வரி பிடித்தம் செய்யவேண்டும்.
ஆசிரியர்களின் விருப்பமாக நடைமுறைப்படுத்த வேண்டும். 10. 20 ஆண்டுகளுக்கு மேலாக முதுகலை ஆசிரியர்களுக்கு ஒரே ஒரு பதவி உயர்வு மட்டுமே இருப்பதால் மேல்நிலை தொகுதி அளவில் DI பணியிடங்கள் மற்றும் முதன்மை கல்வி அலுவலரின் கூடுதல் PA மாவட்ட உதவி திட்ட இயக்குனர்
உள்ளிட்ட பணியிடங்கள் பதவி உயர்வு பணியிடங்களாக முதுகலை ஆசிரியர்
தொகுதிக்கு உருவாக்கிட வேண்டும் மேல்நிலைக் கல்விக்கு என தனி இயக்குநரகம்உருவாக்கிட வேண்டும். பதவி உயர்வுகள் செங்குத்து அடிப்படையிலான நிலையில்
வழங்கிட வேண்டும்.தமிழக அரசின் பிற துறை அலுவலர்களை விட கூடுதல் கல்வித் தகுதி பெற்றும் ஒப்புமை நோக்கில் குறைந்த ஊதியம் மற்றும் 20 ஆண்டுகளாக பதவி உயர்வு இல்லாத பணி தொகுதியாக இருக்கும் முதுகலை ஆசிரியர்களின் குறைகளை நீக்க ஒரு குழு அமைத்து முதுகலை ஆசிரியர்களின் துயர் துடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.உள்ளிட்ட கோரிக்கைகளை ஆர்ப்பாட்டத்தில் வலியுறுத்தினர்.

