தருமபுரி மாவட்டத்தில் ஜூன்- 25 முதல் 28 வரை ஜமாபந்தி பொதுமக்கள் குறைகள் தொடர்பான மனுக்களை அளித்து தீர்வுக்காணலாம். ஆட்சியர் கி.சாந்தி தகவல்
தருமபுரி மாவட்டத்தில் 1433-ம் பசலி ஆண்டிற்க்கான வருவாய்த் தீர்வாயம் (ஜமாபந்தி) வருகின்ற 25.06.2024 முதல் 28.06.2024 வரை கீழ்க்கண்டவாறு வட்டம் வாரியாக நடைபெறவுள்ளது.

பொதுமக்களிடமிருந்து மனுக்கள் பெறப்படும். எனவே, பொதுமக்கள் தங்களது நிலப்பிரச்சனை தொடர்பான மனுக்கள், பட்டா மாறுதல் மேல்முறையீடு மனுக்கள், பட்டாவில் பெயர்திருத்தம், பட்டாதாரர் பெயர்களில் எழுத்துப்பிழை, பரப்புதிருத்தம், நிலவுடைமை மேம்பாட்டுத்திட்ட மேல்முறையீட்டு மனுக்கள், உட்பிரிவு மேல்முறையீடு மனுக்கள் உள்ளிட்ட அனைத்து வகையான பொதுமக்களின் குறைகள் தொடர்பான மனுக்களையும் ஜமாபந்தி அலுவலரிடம் உரிய ஆவண, ஆதாரங்களுடன் அளித்து, தங்கள் குறைகளை நிவர்த்தி செய்துகொள்ள, இந்த ஜமாபந்தி நிகழ்வினை பயன்படுத்திக் கொள்ளுமாறு தெரிவிக்கப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி, தெரிவித்துள்ளார்.

