பொம்மிடி கோட்டமேடு பகுதியில் வேப்பாடிஆற்றில் கட்டப்பட்டுள்ள தடுப்பனை சேதம். புதியதாக தடுப்பனை கட்ட வலியுறுத்தல்.
பொம்மிடி அருகே கோட்டமேடு அருகில் உள்ள வேப்பாடி ஆற்றில் கட்டப்பட்ட தடுப்பணை சேதமடைந்துள்ளது. தடுப்பனையை புதியதாக கட்டவேண்டும் என மாவட்ட நிர்வாகத்தை அப்பகுதி விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டம் கோட்டமேடு கிராமத்தின் அருகே உள்ளது வேப்பாடி ஆறு.இந்த ஆற்றில் மழைக்காலங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். தொப்பையாறு அணைக்கு செல்லும் இந்த தண்ணீரை தடுப்பணை கட்டி தேக்கி வைக்கவேண்டும் என்று விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் தடுப்பனை கட்டப்பட்டது. இதனால் பகுதியில் உள்ள 1,000-க்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்றது.இந்த தடுப்பனை பாரமரிப்பு இல்லாததால் தற்போது முற்றிலும் சேதமடைந்தது.
இதுகுறித்து ஆம் ஆத்மி கட்சியின் மாவட்ட இணைச்செயலாளர் ஜெபசிங் கூறுகையில்:

கோட்டமேடு பகுதியில் உள்ள வேப்பாடி ஆற்றில் உள்ள தடுப்பனை முற்றிலும் சேதமடைந்துவிட்டது.இதனால் மழைகாலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் தடுப்பனையில் தேங்குவதில்லை.தடுப்பனை சேதமடைந்ததால் தண்ணீர் இன்றி வறண்டுகாணப்படுகிறது. தடுப்பனையில் தண்ணீர் இல்லாததால், அப்பகுதியில் சுமார் 3 கிலோமீட்டர் சுற்றளவு கொண்ட விவசாய நிலம் தண்ணீர் இல்லாமல் விவசாயம் செய்ய முடியவில்லை. மேலும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள கிணறு நீர்நிலைகளில் தண்ணீர் வற்றிவிட்டது.
எனவே பழுதடைந்த தடுப்பனையை இடித்துவிட்டு புதிய தடுப்பனை கட்டி இப்பகுதி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.
