பெண்கள் இணைப்புகுழு ஒருங்கிணைந்த நடத்தும். பாரம்பரிய விதை திருவிழா மற்றும் விழிப்புணர்வு கருத்தரங்கம்.
தருமபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த எக்காண்டஅள்ளி கிராமத்தில் தர்மபுரி மாவட்ட தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு நடத்தும் பாரம்பரிய விதை திருவிழா.
இதனைத் தொடர்ந்து பெண்கள் கேழ்வரகு, பனிவரகு, திணை. சாமை. வரகு, கம்பு, சோளம். அரிசி. கோதுமை ஆகியவை மண் பானை மூலம் ஊர்வலமாக கொண்டு சென்று பெண்கள் சிறுதானிய நடுவில் வைத்து கிராமிய கும்மி பாடலுக்கு நடனமாடி சிறுதானியங்களே மீட்டெடுப்போம் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இந்த நிகழ்ச்சி மாவட்ட ஒருங்கிணைப்புபாளர் தமிழ் நாடு பெண்கள் இணைப்பு குழு. லிட்வின் தலைமை வகித்தார்.
தமிழ்நாடு பெண்கள் இணைப்புக்குழு பாலக்கோடு வட்டார நிர்வாகி ரங்கநாயகி வரவேற்றுபேசினார்.களஞ்சிய பெண் விவசாயிகள் சங்க மாநில தலைவர் பொன்னுதாய்சிறப்புரையாற்றினார்.ஜக்க சமுத்திரம் தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் கலில். தருமபுரி மனித உரிமை ஆணையம் செந்தில் ராஜா. ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

இத்திருவிழாவில் சிறுதானிய விவசாயிகளை பாதுகாக்க வேண்டும். சிறுதானியம் விலை நிர்ணயம் செய்யப்பட வேண்டும். சத்தீஸ்கர் அரசு போல மானவாரி பயிரான சிறுதானிய உற்பத்தி செய்யும் விவசாயிகளுக்கு தண்ணீர் மின்சாரம் மிச்சப் படுத்தி ஊக்கத்தொகை வழங்க வேண்டும்.
நியாய விலைக்கடை ,சத்துணவு, மாணவ விடுதிகள், மருத்துவமனை,அம்மா உணவகம். சிறைச்சாலை போன்ற அரசு உணவு வழங்கும் திட்டங்களில் சிறு தானியங்கள்வழங்கவேண்டும்.சிறுதானியம் உற்பத்தி செய்யும் சிறு குறு விவசாயிகளின் விவசாய வேலைகளை ஊரக100 நாள் வேலை திட்டத்தில் உள்ளடக்க வேண்டும்.
சிறுதானியத்தை 50% கூலி உள்ளடங்கி லாபகரமான அடிப்படை ஆதார விலையே உறுதி செய்து அரசு கொள்முதல் செய்ய வேண்டும்.பஞ்சாயத்த அளவில் தானிய கிடங்குகள் அமைத்து விவசாய பொருட்களை அங்கு சேமித்து பராமரித்து பாதுகாத்து விநியோகம்செய்யவேண்டும். என கோரிக்கை வைத்தனர்.இறுதியில் பாலக்கோடு தமிழ்நாடு பெண்கள் இணைப்பு குழு. உமா நன்றினார்.

