ஐடிஐ படித்தவர்களுக்கு பணி ஆணை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்
தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் தருமபுரி, அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் பயின்றுவரும் 281 பயிற்சியாளர்களுக்கு தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள், நிறுவனங்களின் நேரடி வேலைவாய்ப்புக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு தேர்வு எழுதவுள்ள அனைத்து பயிற்சியாளர்களுக்கும் கடந்த இரண்டு மாதங்களாக (ஏப்ரல் 2024 முதல் மே 2024 வரை) 100% வேலைவாய்ப்பினை உறுதி செய்யும் நோக்கில் முன்னனி நிறுவனங்களான கீழ்க்கண்ட நிறுவனங்களில் பயிற்சியாளர்களுக்கு நேர்காணல் நடத்தி தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 159 பயிற்சியாளர்களுக்கும், நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 87 பயிற்சியாளர்களுக்கும் மொத்தமாக 246 பயிற்சியாளர்களுக்கும்,
அரூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழிற்பழகுநர் பயிற்சிக்கான ஆணைகள் 10 பயிற்சியாளர்களுக்கும், நிறுவனங்களில் நேரடி வேலைவாய்ப்புக்கான ஆணைகள் 25 பயிற்சியாளர்களுக்கும் என மொத்தமாக 35 பயிற்சியாளர்களுக்கும் மாத ஊதியம் ரூ.15,000 முதல் ரூ.18,000 வரையிலும், தங்குமிடம் மற்றும் இலவச உணவுடன் கூடிய வேலைவாய்ப்புக்கான ஆணைகளை மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி பயிற்சியாளர்களுக்கு வழங்கினார்.
இந்நிகழ்வில் தொழிற்பயிற்சி நிலைய முதல்வர் திரு.டி.கே.சிவகுமார் மற்றும் பணியமர்த்தும் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

