- பாலஸ்தீன மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
பாலஸ்தீன மக்கள் மீதான இஸ்ரேலின் தாக்குதலை கண்டித்து அரூரில் காங்கிரஸ் கட்சியின் அமைப்புசாரா தொழிலாளர் பிரிவின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் வட்டாச்சியர் அலுவலகம் எதிரே நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு காங்கிரஸ் கட்சியின் தொழிலாளர் பிரிவின் மாநில செயலாளர் இம்ரான் தலைமையில் நடைபெற்றது.
இதில் பாலஸ்தீன மீதான இஸ்ரேலின்இன படுகொலையை கண்டித்து கண்டன கோஷங்கள் எழுப்பபட்டன இதில் காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் வஜ்ஜிரம் சிவலிங்கம் திமுக சார்பில் மேற்கு மாவட்ட சிறுபான்மை பிரிவு மாவட்ட துணை அமைப்பாளர் ஏ.முஜீப் சூர்யாவெங்கடேசன் விசிக சார்பில் தொகுதி துணை செயலாளர் பெ.கேசவன் ஒன்றிய துணை செயலாளர் தீரன்தீர்த்தகிரி முருகன் ராம் உள்ளிட்டோர் பேசினர்.

