ஆட்சியில் மக்கள் பணிகளை மேலும் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்.

திராவிட மாடல் ஆட்சியில் மக்கள் நலத்திட்டங்கள் மேலும் செம்மையாக நடைமுறைப்படுத்துவது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் 13 மாவட்ட ஆட்சித் தலைவர்கள் பங்கேற்ற ஆய்வுக் கூட்டம்.
தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற இக்கூட்டத்தில் சட்டம் – ஒழுங்கு பராமரிப்பு, சமூகநலத் திட்டங்களைச் செயல்படுத்துதல்; கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், பொதுமக்களுக்கு அரசு சேவைகள் கிடைப்பதை உறுதி செய்தல் ஆகிய குறிக்கோள்களை கவனத்தில் கொண்டு செயலாற்றுமாறு மாவட்ட ஆட்சித் தலைவர்களை முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் அறிவுறுத்தினார்.

