தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும்.புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சி வலியுறுத்தல்
புரட்சிகர சோஷலிஸ்ட் கட்சியின் மாவட்டக்குழு கூட்டம் எஸ்.எம்.அம்மாசி தலைமையில் தருமபுரி கட்சி அலுவலகத்தில் நடை பெற்றது.
அக்கட்சியின் மாவட்ட செயலாளர் இ. பி . புகழேந்தி இன்றைய அரசியல் நிலை குறித்தும் , எதிர்கால கடமைகள் குறித்தும் பேசினார் . மாவட்டக் குழு உறுப்பினர்கள் ஆர். வடிவேல், ஆர்.வேடியப்பன் , பி.காவேரி , ஆர். முனுசாமி, எஸ். எம். பெருமாள், ஜி. தமிழரசன்,கோவிந்தன் , சி.மேகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கீழ் கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் நாட்டில் 39,தொகுதிகளிலும் புதுச்சேரி 1 தொகுதியிலும் இந்திய கூட்டணியை மகத்தான வெற்றி அடைய செய்த வாக்காள பெருமக்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொண்டது.மேலும் மதவாத, சாதிய சக்திகளை தோல்வி அடைய செயதமைக்கு பாராட்டுக்களை தெரிவித்து கொண்டது.
தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்த காலத்தில் நிறுத்தி வைத்திருந்த அரசின் திட்டங்களை உடனடியாக செயல் படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது .மகளிர் உரிமை தொகைக்காக விண்ணப்பித்துள்ள அனைவருக்கும் உரிமை தொகை வழங்க வேண்டும்.மழைக்காலம் துவங்க உள்ளதால் மழை நீரை சேமிக்கும் வகையில் ஏறி, குளங்களை தூர்வாரவேண்டும்.
தருமபுரி நகராட்சியை விரிவாக்கம் செய்வதை வரும் உள்ளாட்சி தேர்தலில் நடைமுறை படுத்த வேண்டும். இலக்கியம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பாரதி புறத்திலிருந்து ஆயுதப்படை வரை மேம்பாலம் அமைக்க தேர்தலுக்கு முன் தர்மபுரி வருகை தந்த போது 30 மதிப்பீட்டில் அடிக்கல் தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் நாட்டினார். இந்த திட்டத்தை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தை கேட்டுக்கொண்டது.
