இந்த 5 முறையை கடைபிடிச்சா ஆரோக்கியத்துடன் வாழலாம்.
உணவு பாதுகாப்பு துறை அலுவலர் சொல்வது என்ன!
தருமபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை சார்பாக, பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் உலக உணவு பாதுகாப்பு தின விழா நடைபெற்றது.
பாலக்கோடு ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் சுருளிநாதன், ஜெகதீசன் ஆகியோர் முன்னிலைவகித்தனர். காரிமங்கலம் மற்றும் பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் வரவேற்றார் ,
மாவட்ட நியமன அலுவலர் மருத்துவர். ஏ.பானுசுஜாதா தலைமை வகித்து பேசுகையில்:

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் ஏழாம் தேதி உலக உணவு பாதுகாப்பு தினமாக ஒரு கருப்பொருளுடன் அனுசரிக்கப்படுகிறது.மனிதன் அன்றாடம் எடுத்துக் கொள்ளக்கூடிய உணவு சக்தியை மட்டும் தருவதாக இருக்க வேண்டும் அதற்கு மாறாக அவனை அவனுக்கு கெடுதல் கொண்டு வந்து சேர்க்கும் என்றால் அது நிச்சயமாக உணவாக இருக்க இயலாது. எனவே உணவு பாதுகாப்பை உறுதி செய்ய ஐந்து விஷயங்களை முக்கியமாக பின்பற்ற வேண்டும் என இந்திய உணவு பாதுகாப்பு தரநிர்ணய ஆணையம் வலியுறுத்துகின்றது.
அவை தன் சுத்தம், சமையலறை மற்றும் சுற்றுப்புறசுத்தம், பாதுகாப்பான உணவிற்கான அனைத்து வழிகளை பின்பற்றுதல், உணவை உட்கொள்ளும் முன் அது கலப்படம் இல்லாமலும் கெட்டுப் போகாமல் இருப்பதை உறுதி செய்தல் மேலும் நீங்கள் உண்ணும் உணவைப் பற்றிய தகவல்களை விபரச்சீட்டில் இருந்து அறிந்து கொள்ளுதல் ஆகியவை முக்கியமான ஐந்து தூண்கள் ஆகும் இவற்றை கடைபிடித்தாலே உடல் நல்ல ஆரோக்கியத்துடன் பாதுகாப்பான முறையில் வாழலாம் என தெரிவித்தார்.
பாலக்கோடு ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் பேசுகையில்:உணவுப் பொருட்களின் லேபிள்களில் காண வேண்டிய அம்சங்கள் குறித்து அதாவது உணவுப் பொருள் பெயர், தயாரிப்பு முகவரி, தயாரிப்பு தேதி, முடிவு தேதி நுகர்வோர் தொடர்பு எண், உணவு பாதுகாப்பு உரிம எண் மேலும் சைவ , அசைவகுறியீடுகள் உணவுப் பொருட் உட்காரணிகள், அலர்ஜி தன்மை , ஊட்டச்சத்து தகவல்கள் குறித்து உரிய பொருள்களுடன் நேரடி செயல் விளக்கம் அளித்தார்.
நிகழ்வில் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் செயல்பாடுகள் குறித்தும் உணவுப் பொருட்களில் கலப்படம் நிகழ்வு இடத்திலேயே கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் குறித்தும் எடுத்துரைத்தார்.
உணவுப் பொருட்கள் சிலவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து இளநிலை பொது பகுப்பாய்வாளர் கார்த்திகேயன் அவர்களும் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் இணைந்து தேயிலை, தேன், சமையல் எண்ணெய், நெய், வெல்லம் உள்ளிட்டவற்றில் கலப்படம் கண்டறிதல் குறித்து நேரடி செயல் விளக்கம் அளித்தனர்.
நிகழ்வில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராமஜெயம், இந்துமதி, குணசேகரன், அழகு மற்றும் மளிகை வியாபாரிகள் சங்க செயலாளர் சரவணன், ஹோட்டல் சங்கச் செயலாளர் சீனிவாசன், நிர்வாகி அன்னை சத்யா வடிவேல் பொதுமக்கள் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். இறுதியாக வட்டார வளர்ச்சி அலுவலர் ஜெகதீசன் நன்றி கூறினார்

