சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு எஸ்.கொட்டாவூரில் மரக்கன்றுகள் நடும் விழா
சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு தருமபுரி ஒன்றியம் செம்மாண்டகுப்பம் ஊராட்சி எஸ்.கொட்டாவூர் கிராமத்தில் மரக்கன்றுகள் நடும் விழா நடைபெற்றது.
ஊராட்சி மன்ற தலைவர் பி.பாணுபூமணி மரக்கன்றுகளை நட்டு வைத்தார்.

இந்நிகழ்வில் தருமபுரி வனசரக அலுவலர் அருண் பிரசாத், வனகாப்பாளர்கள்
கார்த்திக் , முனியப்பன் ,ஊராட்சி செயலாளர் இடும்பன் முன்னாள் ஊராட்சிமன்ற தலைவர் கந்தசாமி மற்றும் மாது, முனியப்பன்,நாகராஜ்,சிவப்பாதம்
உள்ளிட்ட வ. ஊ. சி. இளைஞர் நற்பணி மன்றத்தினர் பங்கேற்றனர்.

