தருமபுரி பணி ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு பணி நிறைவு பாராட்டுவிழா
தருமபுரி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் கொலசன அள்ளியில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் தா.இராமலிங்கம், நவலையில் பணிபுரிந்த தலைமை ஆசிரியர் இரவி,பென்னாகரத்தில் பணிபுரிந்த கோவிந்தன் ஆகியோருக்கு பணிநிறைவு பாராட்டு விழா ஞாயிற்றுக்கிழமை அன்று தருமபுரி மருந்து வனிகர் மஹாலில் நடைபெற்றது.

இவ்விழாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ஏ.குமார்,பணி ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பி.அண்ணாமலை,ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் தன்ராஜ்,சேலம் டி.ஆர்.இ.யூ தலைவர் எஸ்.திருப்பதி,ஓய்வுபெற்ற மாவட்ட கல்வி அலுவலர் முனிமாதையன் ,டி.என்.பெஸ்ட் தலைவர்இல. இரவி, மாநிலத்துணைசெயலாளர் சுரேஷ்,மாவட்ட தலைவர் ஜி.ஏழுமலை,மாவட்ட செயலாளர் அருள்,மாவட்ட துணைத்தலைவர் சர்க்கரை ஆகியோர் வாழ்த்திப்பேசினர்.

பணி ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர்களுக்கு நினைவு பரிசு வழங்கினர்.

