செட்டிக்கரை
அன்னை இந்திராகுடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைப்பதில் தாமதம். பணியை விரைந்து முடிக்க பொதுமக்கள் வலியுறுத்தல்.
செட்டிகரை அன்னை இந்திரா குடியிருப்புக்கு சிமென்ட் சாலை அமைக்கும் பணியில் தாமதம் ஏற்படுவதால், விரைந்து சிமென்ட்சாலை அமைக்க வேண்டுமென அப்பகுதி பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தருமபுரி ஒன்றியம் செட்டிக்கரை ஊராட்சிக்குபட்டது, செட்டிக்கரை அன்னைஇந்திரா குடியிருப்பு பகுதி,இங்கு 50 கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன.இங்கு தலித் மக்கள் குடியிருந்து வருகின்றனர்.இவர்கள் அனைவரும் நிலமற்ற ஏழை தினக்கூலி தொழிலாளர்களாகும்.இங்குள்ள தெருக்களுக்கு சிமெண்ட் சாலை அமைக்கவில்லை. பல ஆண்டுகளாக குண்டும் குழியுமாக இருந்துவந்தது மண்சாலையில் புல் வளர்ந்து வயல் வரப்பு போன்று காட்சியளித்தது. தார்சாலை அமைக்க வலியுறுத்தி தொடர்ந்து அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் மனுகொடுத்துவந்தனர்.
இதனையடுத்து மாவட்ட நிர்வாகம் செட்டிக்கரை இந்திரா நகர் குடியிருப்புக்கு சிமென்ட்சாலை அமைக்கும் பணியை கடந்த இரண்டு மாதத்திற்கு முன் துவங்கியது .சிமென்ட் சாலை அமைக்க மண் கொட்டப்பட்டு நிரவி விடப்பட்டது ஆனால் சிமென்ட் சாலை அமைக்கும் பணி இடையில் கைவிடப்பட்டது. இதனால் தற்போது மழைபெய்துவருவதால் மண்சாலை, சேரும் சகதியுமாக மாறிவிடுகிறது. முதியோர் மற்றும் குழந்தைகள் வழுக்கி விழும் அவலநிலை ஏற்படுகிறது.
மேலும் இங்குள்ள தெருக்களுக்கு கழிவுநீர் கால்வாய் பணிகள் நடைபெற்றுவருகிறது இப்பணியும் முழுமையடையவில்லை. இதனால் கழிவுநீர் செல்லவழியில்லாமல் தெருவில் தேங்கும் நிலை உள்ளது.
இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சுப்பிரமணி கூறுகையில் :

மண்சாலையை சிமெண்ட் சாலையாக மாற்றவேண்டும்.தெருக்களில் கழிவுநீர் கால்வாய் அமைக்கவேண்டும் கோரிக்கை வைத்தது அதிகாரிகளிடம் மனுகொடுத்ததால் கடந்த மார்ச் மாதம் எங்கள் பகுதிக்கு சிமென்ட்சாலை அமைக்கு பணி துவங்கியது. முதல் கட்டமாக மணல்கொட்டி சாலையை நிரவினர்.அதன் பின் சிமென்ட் சாலை அமைக்க எந்த நடவடிக்கையும் இல்லை மண்சாலையாகவே உள்ளது.காலதாமதம் செய்யாமல் சிமென்ட் சாலை அமைக்கவேண்டும்.ஜல்சக்தி திட்டத்தின் மூலம் ஒகேனக்கல் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டது . சாலை அமைக்கும் பணியின் போது தண்ணீர் குழாய் சேதம் அடைந்துள்ளது. பழுதடைந்த தண்ணீர் குழாய்களை சீரமைக்க வேண்டும். .தற்போது ஒகேனக்கல் குடிநீர் மட்டும் அவ்வப்போது எங்களுக்கு கிடைக்கிறது.வீட்டு உபயோகத்திற்கு தேவையான தண்ணீர் இல்லை. இதனால் எங்கள் பகுதிக்கு ஆழ்துளை போர்வெல் அமைத்து மேல்நிலை நீர்தேக்க தொட்டி மூலம் தண்ணீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும் என மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தார்.

