தருமபுரி நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் ஆ.மணி 20856 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி
தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர், பாப்பிரெட்டிப்பட்டி சேலம் மாவட்டம் மேட்டூர் உள்ளிட்ட 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கும் பாராளுமன்ற தொகுதியில் 753820 ஆண் வாக்காளர்களும் 770897 பெண் வாக்காளர்களும் மூன்றாம் பாலினத்தவர் 197 என மொத்தம் 1524896 வாக்காளர்கள் உள்ளனர்.

தருமபுரி நாடாளுமன்ற தொகுதியில் இந்தியா கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் ஆ.மணி,அதிமுக வேட்பாளர் ஆர்.அசோகன் பாமக வேட்பாளராக செளமியா அன்புமணி உள்ளிட்ட 26 பேர் போட்டியிட்டனர்.
தருமபுரி அரசு பொறியியல் கல்லூரியில் வாக்கு எண்ணப்பட்ட நிலையில் முதல் 10 சுற்றில் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி முன்னிலையில் இருந்தார்.
பிறகு 11 ஆவது சுற்றில் இருந்து 23 சுற்றுவரை பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி காட்டிலும் ஒவ்வொரு சுற்றிலும் கூடுதல் வாக்கு பெற்று முன்னிலையில் இருந்தார் இறுதியாக 23 ஆவது சுற்றில் தபால் வாக்குகள் உட்பட திமுக வேட்பாளர் ஆ.மணி 429301 வாக்குகளும் பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி408445 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்திலும் அதிமுக வேட்பாளர் ஆர். அசோகன் 291590 வாக்குகள் பெற்று 3 ஆவது இடத்தை பிடித்தார்.பாமக வேட்பாளர் செளமியா அன்புமணி யை காட்டிலும் கூடுதலாக 20856 வாக்கு பெற்று திமுக வேட்பாளர் ஆ.மணி வெற்றிபெற்றார்.
வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணிக்கு தேர்தல் நடத்தும் அலுவலர் சான்றிதழ் வழங்கினார்.
இந்த வெற்றியை தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 38 தொகுதி வெற்றிபெற்ற நிலையில் தருமபுரி தொகுதி இழுபறியில் இருந்தது இதனால் அரசியல் கட்சிகளும் பொதுமக்களும் யார் வெற்றி பெறுவார்கள் என்று பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

