ஜூன் -7ல் தருமபுரி கோட்டத்திற்குபட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம்
தருமபுரி மாவட்டம், தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களை சார்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான குறைதீர்க்கும் கூட்டம் ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் வெள்ளிக்கிழமை அன்று நடத்த மாவட்ட ஆட்சியரின் அறிவுறுத்தியதற்கிணங்க வருகின்ற 07.06.2024- ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை 11.00 மணியளவில் தருமபுரி வருவாய் கோட்டத்திற்குட்பட்ட வட்டங்களைச் சேர்ந்த விவசாயிகளின் குறைகளை தீர்ப்பதற்கான, விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் தருமபுரி வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் வருவாய் கோட்ட அலுவலர் தலைமையில் நடைபெற உள்ளதால் சம்மந்தப்பட்ட அலுவலர்கள் விவசாயிகள் மற்றும் விவசாயி சங்க பிரதிநிதிகளும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு வருவாய் கோட்ட அலுவலர் இரா.காயத்ரி தெரிவித்துள்ளார்.

