தருமபுரி வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணிக்காக 650 காவலர்கள்
தருமபுரி பாராளுமன்ற தேர்தல் அலுவலரும் மாவட்ட ஆட்சியருமான கி.சாந்தி தருமபுரியில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி
தருமபுரி செட்டிக்கரையில் உள்ள அரசு பொறியியல் கல்லூரியில், பாராளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டு நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது.தருமபுரி பாராளுமன்ற தொகுதிகுட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணிக்காக 6 வாக்கு எண்ணும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அஞ்சல் வாக்கு எண்ணுவதற்கு தனியாக ஒரு மையம் அமைக்கப்பட்டுள்ளது.ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் வாக்கு எண்ணுவதற்கு 14 மேசைகள் அமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு மேசையின் மேல் ஒரு CCTV கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
அஞ்சல் வாக்குகளை எண்ணுவதற்காக 14 மேசைகள்அமைக்கப்பட்டுள்ளது.தபால் வாக்கானது சரியாக காலை 08.00 மணிக்கு துவங்கப்பட்ட பின்னர், அரை மணி நேரம் கழித்து மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணும் பணியானது ஆறு சட்டமன்ற தொகுதிகளிலும் ஒரே நேரத்தில் துவங்கப்படும்.தருமபுரி பாராளுமன்ற தொகுதிக்கு வாக்கு எண்ணும் பார்வையாளர்களாக 57- பாலக்கோடு, 58-பென்னாகரம், 59-தருமபுரி ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு அருணா ரஜோரியா,அவர்களும் மற்றும் 60- பாப்பிரெட்டிப்பட்டி, 61-அரூர்(தனி), 85-மேட்டூர் ஆகிய மூன்று சட்டமன்ற தொகுதிகளுக்கு ஸ்ரீஹர்ஷா எஸ் செட்டி ஆகியோர் இந்திய தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்டு, மேற்கண்ட பார்வையாளர்கள் இன்று வாக்கு எண்ணும் மையத்திற்கு சென்று ஆய்வு செய்தனர்.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியில் நியமனம் செய்யப்பட்ட வாக்கு எண்ணும் பணியில் உள்ள அலுவலர்கள் மற்றும் முகவர்களுக்கு தனித்தனி வர்ணங்களில் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. ஆயிரம் முகவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது.வாக்கும் எண்ணும் பணியில் 340 ஊழியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு பணிகாக சுமார் 650 காவலர்கள்பணியமர்த்தப்பட்டுள்ளனர்.வாக்கு எண்ணும் மையத்தில் அவரச சிகிச்சை பிரிவு ஒன்றும், இரண்டு 108 ஆம்புலன்ஸ்களும் தயார் நிலையில் இருக்கும் பொருட்டு உரிய நடவடிக்கைகள்மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

