மாதர் சங்க தலைவர் மைதிலி சிவராமன் நினைவு தினம் அனுசரிப்பு
அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் ஸ்தாபக தலைவர் பெண்ணுரிமை போராளி மைதிலி சிவராமன் அவர்களின் நினைவுதினத்தை முன்னிட்டு அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தருமபுரியில் அவரது உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட தலைவர் ஏ.ஜெயா தலைமை வகித்தார்.மாவட்ட செயலாளர் ஆர்.மல்லிகா முன்னாள் மாவட்ட செயலாளர் எஸ்.கிரைஸாமேரி மாவட்ட நிர்வாகிகள் கே.பூபதி ,கே.சுசிலா,ஒன்றியசெயலாளர் எம்.மீனாட்சி ஒன்றிய தலைவர் தமிழ்மணி நகரசெயலாளர் எஸ்.நிர்மலாராணி, நிர்வாகிகள் மாது ரங்கநாயகி ஆகியோர் பங்கேற்று பேசினார்.

