நகை சேமிப்பு திட்டத்தில் ரூ 100 கோடி மோசடி செய்த நகைக்கடை உரிமையாளர் கைது செய்து சிறையில் அடைப்பு
தருமபுரி, சேலம், ஆத்தூர், அரூர் உள்ளிட்ட 11 நகரங்களில் உள்ள நகை கடைகளில் கவர்ச்சிகரமான சேமிப்பு திட்டங்களை தொடங்கி 100 கோடிக்கு மேல் மோசடி செய்த சபரி சங்கரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் பாண்டிச்சேரியில் வைத்து நேற்று கைது செய்து இன்று தருமபுரி அழைத்து வந்து வழக்கு பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.

எஸ் வி எஸ் நகைக்கடை என்ற பெயரில் சேலம், தருமபுரி, அரூர், ஆத்தூர், நாமக்கல், கோவை, திருச்சி, கரூர், உள்ளிட்ட 11 நகரங்களில் செயல்பட்டு வருகிறது. இந்த நகைக்கடையின் உரிமையாளர் நடத்திய மோசடியால் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர்.
புகாரின் பேரில் சேலம் மாநகர ஆணையர் விசாரணை மேற்கொண்டார் .விசாரணையில் சேலம் மாவட்டம் வீராணம் அருகே உள்ள வலசையூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பதும், சபரி சங்கர் சேலம் அடுத்த சீல்நாயக்கன்பட்டி அம்மாபேட்டை ஆத்தூர் தருமபுரி அரூர் உள்ளிட்ட11இடங்களில்நகைக்கடைகளை நடத்தி வந்துள்ளது தெரியவந்தது.
நகைக்கடை மூலம் மாத சீட்டு திட்டம், பழைய நகைகளுக்கு புதிய நகை வழங்கும் திட்டம், என கவர்ச்சிகரமான பல திட்டங்களைசபரிசங்கர்அறிவித்துள்ளார். இதை நம்பிய ஏராளமானோர் நகை திட்டத்தில் சேர்ந்து பல லட்சம் ரூபாய் சேமிப்பு பணத்தை செலுத்தி உள்ளனர்.
இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு அவர் அனைத்து கடைகளையும் திடீரென மூடி விட்டு ரூபாய் 100 கோடி மதிப்பிலான நகை பணத்துடன் தலைமறைவாகி விட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியானது.
இதனால் தீபாவளி நேரத்தில் சீட்டு போட்டவர்கள் நகை எடுக்க வந்தவர்கள் நகை கடைகள் பூட்டப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதுகுறித்து அயோத்தியா பட்டினம் பகுதியைச் சேர்ந்த ரஞ்சித் என்பவர் சேலம் மத்திய குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.
புகாரின் பேரில் விசாரணை மேற்கொண்ட காவல்துறையினர் சபரி சங்கர் தலைமறைவாகி விட்டதாகவும் அவரை கண்டுபிடித்து பணம் மற்றும் நகையை மீட்டு தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததாக கூறப்படுகிறது.
அதன் பெயரில் நகைக்கடை உரிமையாளர் சபரி சங்கர் மேலாளர்கள் கவின், அஜித், ஆகியோர் மீது மோசடி உள்பட ஆறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் எஸ் வி எஸ் நிறுவனத்தில் நகை பணத்தை முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்த ஏராளமானோர் சேலம் மாநகர காவல் ஆணையரிடம் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்தனர். மனுக்கள் அதிகளவில் குவிந்து வந்த நிலையில் தற்போது இந்த வழக்கு தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினரிடம் ஒப்படைக்கப்பட்டு விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் கற்பகம் காவல் உதவி ஆய்வாளர் சிவஞான சம்பந்தம், தலைமை காவலர் முனிகிருஷ்ணன் தலைமையிலான ஐந்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் தலைமறைவான சபரி சங்கரை தனிப்படை அமைக்கப்பட்டு தேடி வந்தனர்.
இந்த நிலையில் செல்போன் சிக்னலை வைத்து நேற்று பாண்டிச்சேரி ரெயின்போ நகர் நாலாவது குறுக்கு தெருவில் உள்ள ஒரு தனி வீட்டில் வைத்து போலீசார் சபரிசங்கரை கைது செய்தனர். பாண்டிச்சேரியில் தனி வீடு வாடகை எடுத்து அங்கு தங்கி வந்தது தெரிய வந்தது. மேலும் சபரி சங்கரை தருமபுரி பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தருமபுரி காவல் நிலையம் நேற்று இரவு அழைத்து வந்தனர். இன்று தருமபுரி நகரில் உள்ள நகைக்கடையை திறந்து சோதனை செய்து முக்கிய ஆவணங்கள் மற்றும் வெள்ளி பொருட்களை போலீசார் கைப்பற்றினர். தருமபுரியில் யார் யார் பணம் கொடுத்து ஏமாற்றப்பட்டனர் என தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதனை அடுத்து இன்று மாலை சபரி சங்கர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைத்தனர்.மேலும் சபரி சங்கர், நீதிமன்ற காவலில் எடுத்து விசாரணை செய்த பின்னரே மோசடி குறித்து தெரியவரும் என பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் தெரிவித்தனர்.

