புள்ளிமானை வேட்டையாடி விற்பனை செய்தவர் கைது
அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி கறியை விற்பனை செய்த குற்றத்திற்காக தேடப்பட்டுவந்த சோளக்கொட்டாய் கிராமத்தை சேர்ந்த சிவன் என்பவரை வனத்துறையினர் கைதுசெய்துள்ளனர்.
தருமபுரி வனக்கோட்டம், மொரப்பூர் வனச்சரகம் அரூர் பீட் அரூர் காப்புக்காடு புளியன் தோப்பு சராகத்தில் 10.05.2023 இரவு கன்னி வலைகளை கொண்டு புள்ளிமானை வேட்டையாடி 1. சிவன் த/பெ இராஜி வயது 48, சோளக்கொட்டாய் கிராமம், தலைமறைவான 2, சேட்டு (எ) பெருமாள் த/பெ கிருஷ்ணன் எருக்கம்பட்டி கிராமம் சேர்ந்தவர் இவர்கள் இரண்டு பேரும் சேர்ந்து புள்ளிமானை கறியாக்கி அல்லிமுத்து சோளக்கொட்டாய் என்பவர் மூலம் பாப்பாரப்பட்டி பகுதியில் மான்கறி விற்பனை செய்த்தற்காக 11.05.2023 பாலக்கோடு வனச்சரகத்தில் வன உயிரினக்குற்றம் பதிவு செய்யப்பட்டு அல்லிமுத்து என்பவருக்கு மட்டும் அபராதம் விதிக்கப்பட்டது.
மொரப்பூர் வனச்சரக எல்லைக்குட்பட்ட பகுதியில் சிவன் மற்றும் சேட்டு ஆகியோர் புள்ளிமானை வேட்டையாடி கறியினை விற்ற குற்றத்திற்காக விசாரணை செய்ய அழைத்தபோது விசாரணைக்கு ஆஜராகாமல் தலைவாகிவிட்டார். இவரை பிடித்து விசாரணை மேற்கொள்ள தேடப்பட்டுவந்த நிலையில் 23.05.2024ம் தேதி மாலை மொரப்பூர் வனச்சரக பணியாளர்கள் மற்றும் வனப்பாதுகாப்புப்படை தருமபுரி வனக்கோட்டம் பணியாளர்கள் இணைந்து குழு அமைக்கப்பட்டு சிவன் த/பெ ராஜி சோளக்கொட்டாய் என்பவரை பிடிக்கப்பட்டது. பின்னர் மொரப்பூர் வனச்சரக அலுவலகம் கொண்டுவரப்பட்டு விசாரணையில் அரூர் காப்புக்காட்டில் புள்ளிமானை வேட்டையாடி அதனை சமைத்து சாப்பிட்டுவிட்டு கறியை விற்பனை செய்ததை ஒப்புக்கொண்டார்.
அதன்படி மொரப்பூர் வனச்சரக வனஉயிரினக்குற்ற வழக்கு பதிவு செய்யப்பட்டது. மாவட்ட வன அலுவலர். கா.இராஜாங்கம், மேற்கண்ட நபர்களை நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ள வழங்கப்பட்ட அறிவுரைப்படி, அரூர் உதவி வனப்பாதுகாவலர் சி.சரவணன், ஆலோசனைபடியும், எதிரியை மொரப்பூர் வனச்சரக அலுவலர் மு.ஆனந்தகுமார், மற்றும் வனப்பாதுகாப்பு படை சரக வனச்சரக அலுவலர் க. ஆலயமணி மற்றும் வனச்சிப்பந்திகள் ஆகியோர் அரூர் குற்றவியல் நீதிமன்ற நடுவர் அவர்கள் முன்பு ஆஜர்படுத்தப்பட்டு அவர்களின் ஆணைப்படி 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டது.

