நாய்களுக்கு விஷம் வைத்துக் கொன்றவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,விவசாயி புகார்.
நாய்களுக்கு விஷம் வைத்து கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கோரி தருமபுரி அருகேவுள்ள சோகத்தூர் கூட்ரோடு பகுதியைச் சேர்ந்த விவசாயி இளங்கோதருமபுரிநகரகாவல்நிலையத்தில் புகாரளித்துள்ளார்.
தருமபுரிஅருகே உள்ள சோகத்தின் கிராமத்தை சேர்ந்த விவசாயி இளங்கோ இவர் குழந்தைகள் வளர்ப்பது போல தனது வீட்டில் பத்துக்கும் மேற்பட்ட நாய்களை பாசமுடன் வளர்த்து வந்துள்ளார். இந்த நிலையில் இன்று காலை வாயில் ரத்தம் கக்கியபடி மூன்று நாய்கள் அடுத்தடுத்து துடிதுடித்தபடி பரிதாபமாக உயிரிழந்துள்ளது.இதனை தொடர்ந்து அடுத்து நான்கு நாய்கள் வாயில் ரத்தம் கக்கியவாறு ஆங்காங்கே சுருண்டு விழந்து உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் மற்ற நாய்கள் எங்கே சென்றது என்ன ஆனது என்று தெரியவில்லை என்று புகார் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.நாய்க்கு விஷம் வைத்து கொன்ற நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என புகார் மனுவில் இளங்கோ குறிப்பிட்டுள்ளார்.நாய்கள் உயிரிழந்திருப்பதால் இளங்கோவின் குடும்பத்தினர் சோகத்தில் ஆழந்துள்ளனர்.

