தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணியின், பணியை பாராட்டி வாழ்த்து தெரிவித்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை சிறப்பாக பணியாற்றிய கலந்துரையாடல் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்தினார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது .
இளைஞர்களை இயக்கப் பணிக்குத் தயார்படுத்தும் நாற்றங்காலாக விளங்கும் நம் @dmk_youthwing பணிகளை மேலும் ஆக்கப்பூர்வமானதாக்க, மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர் – துணை அமைப்பாளர்களை நேரில் சந்தித்து ஆய்வு மேற்கொண்டு வருகிறோம்.
மண்டலம் 4-க்கு உட்பட்ட, தருமபுரி கிழக்கு மாவட்ட இளைஞர் அணி நிர்வாகிகளை இன்று அன்பகத்தில் சந்தித்து அவர்களின் செயல்பாடுகளை ஆய்வு செய்தோம்.

ஓராண்டாக அவர்கள் ஆற்றிய கழகப் பணி-மக்கள் பணிகளை, அவர்களின் மினிட் புக்- பத்திரிக்கைச் செய்திகள்-புகைப்படங்கள் மூலம் ஆய்வுசெய்து தொடர்ந்து சிறப்பாக பணியாற்ற வாழ்த்தினோம். என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

